Monday, March 28, 2011

வலி


கை கொடுக்கும் போது நட்பின் வலி தெரிவதில்லை,
கை விடப்படும் போது தான் தெரிகிறது!!!
தோள் கொடுப்பான் தோழன் என்பார்கள்,
நான் கொடுத்த வலி தாங்காமல் என்னை விட்டான் என் தோழன் ...
இன்று நான் வலியில், ஆனால் அவன்
அவன் வழியில்........

Wednesday, March 23, 2011

முத்தம்

உன் எச்சில் என்னும் தீர்த்தத்திற்காக காத்து கொண்டு இருக்கும் பக்தன் நான்....

Sunday, March 20, 2011

இதழ்கள்


நீ பேசும்போது உன் கண்களைவிட உன் இதழ்களை ரசித்தேன்
என் தெரியுமா?
உன் கண்கள் என்னை பார்க்கின்றன உன் இதழ்களோ
என் பெயரை உச்சரிக்கின்றன.....

Saturday, March 19, 2011

ஹோலி பண்டிகை


கரும்பு என்றால் பொங்கல்;
தீபம் என்றால் தீபாவளி;
காதல் வந்தால் வாழ்வில் வண்ணங்கள்

வண்ணகள் என்றால் வேறு என்ன
ஹோலி தான்....

ஹோலி பண்டிகை வாழ்த்துக்கள்....

உன் பெயர்


பேப்பரில் பெயர் எழுத பேனா கேட்டாய் என்று நினைத்தேன்,
நீ எழுதியது பேப்பரில் மட்டும்மல்ல என் இதயத்திலும் தான் அன்பே!!!

Friday, March 18, 2011

காத்து இருப்பேன்....


அன்று அர்ஜுனனுக்கு தேர் ஓடியாக இருதான் கிருஷ்ணன்,என் வாழ்கைக்கு நீர் ஊற்றியாக இருதார் கிருஷ்ணமுர்த்தி....

என் தந்தையே உன்னுள் நான் கண்டேன் தாயை

நீ தாலாட்டும் தந்து தலைமேல் தங்கினாய் இந்த தலைமகனை....

நடை பழகிக்கினாய்,நடைவண்டியும் பழகிக்கினாய் பள்ளி செல்ல பாதையும் காட்டினாய் பங்கமில்ல பாசமமும் தந்தாய்....


நீயும், தாயும் உலகம் என்று இருதேன்,என்னோடு கை சேர்க்க தங்கை எனும் பாசமலர் ஒன்றையும் தந்தாய்....


காலங்கள் கடந்தன பள்ளியும் முடிந்தது என் வாழ்கை பயணமும் தொடங்கியது...


தோளுக்கு மேல் வளர்த்தால் தோழன் என்பார்கள் அதனால் தான் என்னவோ என்னை தொலைவில் வைத்து பார்த்தாயோ....


உன்னோடு இருக்கும் நேரங்கள் குறைந்தன,வாழ்க்கையின் வலி கண்டதால் என்னவோ உன் மீதி இருக்கும் மதிப்போ உயர்ந்தது கொண்டே இருந்தது...


தொலை துரத்தில் நான் தொலைபேசி தொடர்புகளுடனும் துலைந்து போன மகிழ்ச்சியுடன் இங்கு நான்...


உன் வெள்ளி விழா மணநாள் காண மகிழ்ச்சியுடன் காத்து இருந்தேன்

கண்டேன் உன்னை
மணக்கோலத்தில் அல்ல மரண கோலத்தில்...

உன்ன மணக்கோலத்தில் அள்ளியணைக்க எண்ணி இருதேன்

மரணகோலத்தில் கூட உன்னை அணைக்க முடியாத அளவுக்கு
என் கைகளை உடைத்துவிட்டான் அந்த கடவுள்....

இது விதியின் விளையாட்டா அல்லது

வாழ்கையில் நீ போராட தரும் பயிற்சியா???

உன் நினைவில் நீ விட்டு சென்ற பணியை தொடரும் நான் பிறப்பாய் நீ என் மகனாக என்ற நம்பிகையோடு காத்து இருப்பேன்....

Wednesday, March 16, 2011

தவிப்பு


புரிந்து கொண்ட நெஞ்சம் புரியமால் தவிக்கிறது .,
புரியாது நெஞ்சம் புரிந்து கொள்ள மறுக்கின்றது.!

வெட்கம்


என் மண்ணில் பிறந்த பெண் விண்ணை பார்க்கும் போது,
அந்த நிலவுகூட வெட்கபட்டு மறைகிறது,அவளின் அழகை பார்த்து!!!