Tuesday, October 30, 2012

காதல் கனவு

காதலை கனவு என்றான் நண்பன்
முட்டாள்
அவனுக்கு என்ன தெரியும் அவனோடு பேசி கொண்டு
உன்னை பற்றி சிந்தித்து கொண்டு இருக்கிறேன்
என்று..

கனவா? காதலா?

கொட்டும் மழையில், ஒட்டி உறசி உன்னோடு ஒரே குடையில்,
ஊரே ஒதுங்கி இருக்க, உன்னோடு
கை கோர்த்து நான் நடக்க...
இது என்ன கனவா அல்லது காதலா...          
என் கண்மணிய!!!!

Friday, March 16, 2012

மின்சாரம்


என் வீட்டு குளிர்சாதனபெட்டி கூட
கண்ணீர் சிந்தியது நீ
இல்லாததால்.......

--ஸ்ரீகாந்த்

Thursday, March 8, 2012

மகளிர் தினம்

இந்த மண்ணை சுமப்பவள் நீ,
என்னை கருவில் சுமந்தவள் நீ,
என் துன்பத்தில் தோள் தந்தவள் நீ,
என் தோளோடு தோள் சாய்ந்தவள் நீ,
என் நிழல்போல தொடருந்து வரும் தோழியும் நீ,
உனக்கு என் மகளிர் தின வாழ்த்துக்கள்....

காதலே

காதலே!!!
நீ வெறும் வேதியல் மாற்றமா
அல்லது
எங்கள் வீட்டு வெங்காயமா எப்போதும்
கண்ணீர் சிந்தவைக்கிறாய்!!!

Monday, September 19, 2011

அர்த்தம்

சாக நினைத்தேன் வாழ்வின் அர்த்தம் தந்தாய்,
உன்னோடு வாழ நினைத்தேன் நீயே,
கொன்றுவிட்டாய் உன் பார்வையால்!

Friday, September 16, 2011

எங்கள் கனவு கன்னி

VIP- யாய்  வந்த நட்சத்திரமே,
வாலிபர்கள்  மனதில் வாலி-ball ஆடியவள் நீயே!!!  

உன்னை பார்த்தாலே பரவசம் நீ,
நேருக்கு நேர் வந்தால், துள்ளாத மனமும் துள்ளும்!!!

12 B -ல் அவள் வருவாளா என்று ,காத்து இருந்தேன்,
கண்ணெதிரே  தோன்றினால்
உன்னை  பார்த்தேன்  ரசித்தேன்!!!

பிரியமானவளே,
நீ  ஒரு New, கோவில்பட்டி  வீரலட்சுமி!!!

அந்தபுரத்தில் ,
ஜோடி -யாய்  உன்  கன்னத்தில்  முத்தமிட்டால்
அந்த  time என்  கனவே  கலையாதே .....

அன்று  நட்புக்காக உன்னை இடை  அழகி என்றோம்,
அடித்தது  ஜாக்பாட்  உனக்கு  கொண்டாட்டம்,
எங்களுக்கு  திண்டாட்டம்.. :(

எங்களுக்கு   நீ  வேண்டும் Oncemore.....